மூட்டை தூக்கும் கதிர், தையல் வேலை செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரும் முல்லையும் தனியாக சென்று குடும்பத்தை தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கதிர் கஷ்டப்பட்டு முல்லைக்காக வேலை செய்ய அடுத்து வரும் எபிசோடுகளில் அதிரடி திருப்பம் ஒன்று வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடனால் வந்த பிரச்சனையால் குடும்பம் இரண்டாக பிரிந்துள்ளது. கதிர் முல்லையை அழைத்து கொண்டு தனியாக வீடு பார்த்து சென்றுவிட்டார். குடும்பத்தினர் கதிர் முடிவை நினைத்து ஒரு பக்கம் வருத்தப்பட்டாலும் மறுபக்கம் அவருடைய முடிவு சரியானது தான் என்பது போல பேசுகின்றனர். இதற்கிடையே தனம் தன்னுடைய நகை எல்லாம் அடகு வைத்து மீனாவின் அப்பா கொடுத்த பணத்தை கொடுக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் ஜனார்த்தனன் கோவமாக இருந்தாலும் ஜீவா பணத்தை கொடுத்ததை நினைத்து நிம்மதியாக இருக்கிறார். முல்லையின் தாலி செயினை வைத்து கதிர் வீடு பார்த்து அதற்கு தேவையான பொருள்களை எல்லாம் வாங்கி வைக்கிறார். அவர்களின் வாழ்க்கையை சந்தோசமாக தொடங்குகின்றனர். அதன் பின் கதிர் இனிமேல் கடைக்கு போகமாட்டேன் என சொல்லி இருக்கிறார். அதனால் அவர் கிடைக்கும் தொழில் எல்லாம் செய்து முல்லையை பார்த்துக் கொள்ளப் போகிறார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய திட்டம் அறிமுகம்!
அது மட்டுமில்லாமல் முல்லையும் தனக்கு தெரிந்த தையல் தொழிலை செய்து பணம் சம்பாரிக்க இருக்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. கதிர் முல்லைக்கு தெரியாமல் மூட்டை தூக்கி பணம் கொண்டு வருகிறார். அதை எல்லாம் பார்த்து குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுகின்றனர். ஆனாலும் கதிர் மீது நம்பிக்கை இருப்பதால் குடும்பத்தில் அனைவரும் தைரியமாக இருக்கின்றனர். இனி கதிர் எப்படி தொழிலில் வளர்ந்து கடனை அடைக்கப் போகிறார் என விறுவிறுப்பாக கதை செல்ல இருக்கிறது.