நாளை வானில் தெரிய இருக்கும் ரத்த நிலா – சந்திர கிரகண தினத்தில் நிகழும் அதிசயம்!
ஆண்டிற்கு சில முறை நடக்கும் சூரிய மற்றும் சந்திர கிரகண தினங்களில் வானில் சில அதிசய மாற்றங்கள் நிகழ்கிறது. அந்த வகையில், நாளைய சந்திரகிரகண தினத்தில் நிலா சிவப்பாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த நிலா:
ஆண்டிற்கு குறிப்பிட்ட முறை சூரியன், சந்திரன் மற்றும் நிலா இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய மற்றும் சந்திர கிரகணம் நிகழ்கிறது. மேலும், அவை மாறும் நிலையை பொறுத்து பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயங்கள் அனைத்தும் வரலாற்று நிகழ்வாக பதிவு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பு ஆண்டின் இறுதி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதியான நாளை நடக்க இருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம்.. அடுத்த கட்டத்திற்கு சென்ற அரசு ஊழியர்கள் – போராட்ட பூமியான கர்நாடகா!
Exams Daily Mobile App Download
நாளைய சந்திர கிரகணத்தை இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் இருந்து பார்க்க முடியும், ஆனால் அவற்றை வெறும் கண்ணால் மக்கள் பார்க்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை 2:48 மணி முதல் 6:18 மணி வரை கிரகணம் நடக்க இருக்கிறது. நாளை சந்திரனின் மேல் பூமியின் நிழல் விழ இருப்பதால் நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.