தமிழகம் முழுக்க மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல் – ஒரு மாத கால அவகாசம்!

0
தமிழகம் முழுக்க மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல் - ஒரு மாத கால அவகாசம்!
தமிழகம் முழுக்க மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல் - ஒரு மாத கால அவகாசம்!
தமிழகம் முழுக்க மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல் – ஒரு மாத கால அவகாசம்!

தமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் மட்டுமே மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது தமிழகம் முழுக்க இந்த திட்டத்தை அமல்படுத்த ஒரு மாதம் வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மதுபான பாட்டில்:

தமிழகத்தில் சுற்றுசூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, காலியான மது பாட்டில்களை அப்படியே சாலையோரங்களில் மற்றும் வனப்பகுதியில் வீசுவதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், மேலும், சுற்றுசூழலையும் இது மாசடைய செய்வதால் அந்த மதுபான பாட்டில்களை விற்பனை செய்யும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு திரும்பி மதுபான பாட்டில்களை கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதிலும், குறிப்பாக காலியான மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாழ் பகுதிகள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மலைவாசஸ்தலங்களில் இதுவரைக்கும் 71% பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும், பாட்டில்களை திரும்ப ஒப்படைக்காமல் பெறப்பட்ட தொகை மட்டுமே ஒரு கோடியே 81 லட்சமாக இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகம் முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை தொடரும்படி தமிழக அரசுக்கும், மதுபான கடைகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும், தமிழகத்தில் மட்டுமே கிட்டதட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் காலியான மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த ஒரு மாதத்திற்கு கால அவகாசம் வேண்டும் என டாஸ்மாக் நிறுவனங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஒரு மாதத்திற்குள் இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனவும், மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!