9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரை போட்டி – பரிசுத்தொகை, இலவச சுற்றுலா!!
இந்திய பத்திரிகையாளர் சங்கம், வாய்ஸ் ஆஃப் கிட்ஸ், கொரிய கலாச்சார சங்கம், கொயாத்தே நிறுவனம் மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன் ஒரு வாரம் தென் கொரியா செல்லவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான கட்டுரை போட்டி:
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி இந்திய பத்திரிகையாளர் சங்கம், வாய்ஸ் ஆஃப் கிட்ஸ், கொரிய கலாச்சார சங்கம், கொயாத்தே நிறுவனம் மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்த உள்ளன. இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் மார்ச் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் உள்ள சவால்கள், கொரோனா பெருந்தொற்றால் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அவற்றை சரி செய்யும் முறை, பாலினச் சமத்துவத்தை அடைவது எப்படி, கழிவுகள் மேலாண்மையை எவ்வாறு மேற்கொள்ளலாம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும்.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு – கல்வி வாரிய கூட்டமைப்பு வேண்டுகோள்!!
இந்த போட்டி தேசிய அளவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் மாணவருக்கு முதல் பரிசாக ரூ.20,000, இரண்டாவது பரிசாக ரூ.15,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும். மேலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு 1 வாரம் தென் கொரியா செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.
NMMS தேர்ச்சி மாணவர்கள் உதவித்தொகை பெற புதுப்பிக்க வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!
அதனுடன் சிறப்பு புத்தகமும், இலவச ஆன்லைன் படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் http://lft.org.in/newt/ என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Handwriting competition