தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு – ஆசிரியர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி திறன் மேம்பாடு பயிற்சி!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை மார்ச் 14ம் தேதி முதல் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவுத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – சம்பளம் : ரூ.49000/-
அதன்படி பொதுத் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் மாதம் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அத்துடன் பொதுத் தேர்வு மே 5ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறாக பள்ளிகள் இயல்பு நிலைக்கு தற்போது திரும்பி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிடை பயிற்சி அளிக்கப்படும் நடைமுறை உள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதுகலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி, இசை, கலை உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வருகிற மார்ச் 14ம் தேதி அன்று வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள இணையதளத்தில் திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இந்த பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.