IT துறையில் 96% ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் அனைத்து நிலை பணியாளர்களும் சம்பள உயர்வு மற்றும் போனஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் Wipro நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, மார்ச் 2022-இல் முடிவடைந்த நிதியாண்டிற்கான தகுதியான ஊழியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வினை அறிவித்துள்ளது. அதன்படி, உயர்த்தப்பட்ட சம்பளத்தினை ஊழியர்கள் செப்டம்பர் மாத ஊதியத்தில் பெறுவார்கள். நிறுவனத்தின் அறிவிப்பின் படி தற்போது 96% ஊழியர்களுக்கு இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. மேலும், மேலதிகாரிகள் ஊழியர்களுக்கு இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி சவுரப் அவர்கள், கடந்த காலாண்டில் நிறுவனத்தின் நிதி அழுத்தம் அதிகமாக இருந்த போதிலும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை நிறுவனம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார். மேலாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணி நிலையில் உள்ளவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஊதிய உயர்வைப் பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு அனைத்து நிலை ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தனிமையில் வாடும் சிறை கைதிகளுக்கு நல்ல வாய்ப்பு – அரசின் புதிய திட்டம்!
Exams Daily Mobile App Download
வருவாயின் அடிப்படையில் இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக உள்ள விப்ரோ, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தில் இடைநிலை மற்றும் மூத்த நிலை நிர்வாகிகளுக்கு அளிக்க வேண்டிய ஊதியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத அறிக்கையின் படி, ‘C’ நிலையில் மற்றும் அதற்கு மேல் உள்ள பணியாளர்களின் ஊதியத்தில் மாற்றம் இல்லை என்றும், அதேசமயம் ‘A’ மற்றும் ‘B ‘ நிலையில் உள்ள புதிய மற்றும் டீம் லீடர்கள் தங்களது ஊதியத்தில் 70% அளவிற்கு உயர்வினை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்