இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 9,531 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 9,531 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 9,531 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 9,531 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 9,531 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,48,960 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து புதிதாக 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,368ஆ ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் தொற்றில் நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,23,944 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு குணமடைந்தோர் விகிதம் 98.49% ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க ஒரே தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இதுவரை 2,10,02,40,361 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் B.sc நர்சிங், B.Pharm படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 முதல் தரவரிசை பட்டியல் – அறிவிப்பு வெளியீடு!

அதில் நேற்று ஒரே நாளில் 35,33,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனால் தகுதியுடையோர் அலட்சியம் காட்டாமல் விரைந்து தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு கொரோனா பதிப்புகள் சற்று குறைவு தான் இருப்பினும் மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!