தெற்கு ரயில்வேயில் 9000 காலிப்பணியிடங்கள் – முக்கிய தகவல் வெளியீடு!
நாடு முழுவதும் பலர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர் பிரிவில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதனை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ரயில்வே பணியிடங்கள்
இந்தியாவில் முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் டிக்கெட் பரிசோதகர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் ரயில் இயக்கத்தில் முக்கிய பணியாற்றும் நிலைய அலுவலர் காலிப்பணியிடங்கள் 700ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் இன்ஃபுளுயன்சா பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசு தகவல்!
அவ்வாறு தெற்கு ரயில்வேயில் சுமார் 9000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் இந்தியாவில் ரயில் நிலைய அலுவலர் பிரிவில் காலியாக இருக்கும் 9000 பணியிடங்கள் நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் 50 சதவிகிதம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பதாகவும், மேலும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 9000 நிலைய அலுவலர்களும் பணியில் அமர்த்தப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download