புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை, மூடியே கிடக்கும் தியேட்டர்கள் – ரசிகர்கள் கவலை!
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் சில மாவட்டங்களில் 90% தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.
திரையரங்குகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தடுப்பூசிகளின் விளைவாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் குறைந்து வருகிறது. இதனால் கடந்த ஜூன் 14 முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு அடுத்தடுத்த அறிவிப்பில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி பிறகு கடந்த 21ம் தேதி கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் சில மாவட்டங்களில் புதிய படங்கள் ஏதும் வெளிவராத காரணத்தால் 90% திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
மத்திய அரசு சார்பில் ‘வீட்டில் இருந்தே வேலை’ பார்க்கும் திட்டம் துவக்கம்? எச்சரிக்கை அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் 90% திரையரங்குகள் திறக்கப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் வரும் பட்சத்தில் திரையரங்குகள் வழக்கம் போல செயல்படும் எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால், புதிய திரைப்படங்கள் வெளியாகாத நிலையில், ரசிகர்களின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று திரையரங்குகள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே ஓடிடியில் வந்த படங்கள் மட்டுமே உள்ளதால் ரசிகர்கள் படம் பார்க்க வர மாட்டார்கள்.
TN Job “FB Group” Join Now
அதனால் வரும் செப்டம்பர் 1 முதல் கன்னியாகுமரியில் திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இன்று மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் மட்டும் செயல்படுகிறது. மற்றவை திறக்கப்படவில்லை. திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், சக்தி சுப்பிரமணி திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி திரையரங்குகள் இயங்கும் என்று உறுதியளித்துள்ளார்.