தமிழகத்தில் 90 லட்சம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து மாநில வாரியாக இது குறித்த புள்ளி சேகரிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேருக்கு மது பழக்கம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மது பழக்கம் :
நாட்டில் பார்ட்டி, கொண்டாட்டம் போன்ற நாட்களில் மதுவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் மட்டுமல்ல இப்படி மதுவை தினமும் அளவு மீறி அருந்துவதால் நீண்ட நாள் உயிர் வாழ்வதில் சிக்கல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 2.6 லட்சம் மக்கள் மதுவால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. மேலும் கடந்த 11 ஆண்டுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கான பயண கட்டுப்பாடுகள் தளர்வு – அமெரிக்க அரசு அறிவிப்பு!!
தற்போதைய காலகட்டத்தில் குடிப்பழக்கம் நம் கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகி விட்டது. மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை வைத்தாலும், போராட்டங்கள் நடத்தினாலும் என்ற பயனும் இதுவரை இல்லை. இந்த நிலையில் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்தும் மாநில வாரியாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது. மேலும் கஞ்சா பழக்கத்தில் தமிழ்நாட்டில் சுமார் 1,04,000 பேர் உள்ளதாகவும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 4,43,000 பேர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் தான் சுமார் 1,20,31,000 பேருக்கு கஞ்சா பழக்கம் உள்ளது என்றும் மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.