பள்ளிகள் மூடல், விடுமுறை அறிவிப்பு – 9 மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10 ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் மாணவ, மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அக்.19ம் தேதி 1 முதல் 8 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஊட்டி அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்டவர் சென்று வந்த வகுப்பில் உள்ள 140 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.6 & 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
அதன் காரணமாக வெள்ளிக்கிழமை வரை அந்த பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஊட்டி தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கும் குன்னூர் வட்டாரத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.