தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ரூ.9.5 லட்சம் அபராதம் வசூல் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ரூ.9.5 லட்சம் அபராதம் வசூல் - காவல்துறை அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ரூ.9.5 லட்சம் அபராதம் வசூல் - காவல்துறை அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ரூ.9.5 லட்சம் அபராதம் வசூல் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் வசூலிப்பு:

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜன.6ம் தேதி முதல் தினசரி நாட்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையே முழுமையாக கடடைபிடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டு வாடகைப்படி உயர்வு!

அதன்படி ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு நாட்களில் அரசின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலும் ஊரடங்கு நேரங்களில் அரசின் விதிகளை மீறியவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னை மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

TNPSC குரூப் 3, 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய நடைமுறைகள் வெளியீடு!

அந்த வகையில் கடந்த ஜன.6ம் தேதி முதல் ஊரடங்கு நேரங்களில் அரசு விதிகளை மீறியது தொடர்பாக 62 வழக்குகள் பதிவு, 161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து முக கவசம் அணியாத, சமூக இடைவெளி பின்பற்றாதவர்களிடம் 4,858 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை அனைவரும் தவிர்க்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!