உச்சநீதிமன்றத்தில் புதிதாக 9 நீதிபதிகள் நியமனம் – மத்திய அரசு ஒப்புதல்!
இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் பரிந்துரைத்த 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேருக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நீதிபதிகளின் பட்டியல் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனம்:
இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். எனவே உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி உயர்வு கொடுக்க தேர்வு செய்யப்பட்டது.
இந்தியாவில் ஒரு IAS அதிகாரியின் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? அறிக்கை தகவல்!
இவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. தற்போது கொலீஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். மேலும் இந்த பரிந்துரை பட்டியலில் நீதிபதிகள் நாகரத்னா, ஜே.கே.மகேஸ்வரி, பேலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் தேர்வாகியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த 9 நீதிபதிகள் பட்டியல் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னர் முறைப்படி நீதிபதிகள் பதவியேற்றுக் கொள்வர். நீதிபதி பி.வி.நாகர்த்தனா உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.