9 மாவட்டங்களில் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0
9 மாவட்டங்களில் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு வெளியிட்ட அறிவிப்பு!
9 மாவட்டங்களில் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - அரசு வெளியிட்ட அறிவிப்பு!
9 மாவட்டங்களில் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு வெளியிட்ட அறிவிப்பு!

ஹரியானாவில் வருகிற அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதிகளில் ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதால், 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்த தேதிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

ஹரியானா மாநிலத்தில் ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி தொகுதிகள் காலியாக இருப்பதால் அந்த பகுதிகளில் வருகிற அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி பொதுமக்கள் வாக்களிக்க இருப்பதால் பிவானி, ஜஜ்ஜார், ஜிந்த், கைதல், மகேந்திரகர், நூ, பஞ்ச்குலா, பானிபட் மற்றும் யமுனாநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் தவிர, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நடைபெறும் தேதிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதம்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மாநகராட்சிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று (அக்.29) சர்வதேச இணைய தினம் – மிஸ் பண்ணாம படிங்க!

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து தலைமைச் செயலாளர் சஞ்சீவ் கௌஷால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த தொகுதியில் வாக்களிக்க இருக்கும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 135-பியின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதிக்கான தேர்தல் முடிவுகள் நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என ஹரியானா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!