தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நிலவிய கொரோனா பரவலால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும் அரசின் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும் நடைபெற்றது. அதன் பிறகு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்க தொடங்கியதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
காவலர் உடல் தகுதித்தேர்வினை தவற விட்டோர் கவனத்திற்கு – மீண்டும் வாய்ப்பு!
தற்போது அரசின் முயற்சியால் கொரோனா குறைந்து வருவதால் முன்னெச்சரிக்கை பணிகளுடன் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் 6 முதல்
பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அந்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Biz2Credit நிறுவனத்தில் 150 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு – ஆண்டு இறுதிக்குள் நிரப்ப திட்டம்!
பள்ளிகள் திறக்கப்பட்டு 22 நாட்கள் ஆகியும் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் அதிகரிக்கப்படவில்லை. சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு 100 ஐ கடந்துள்ளது. பிற மாவட்டங்களில் தொற்று 100க்குள் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மீண்டும் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவுத்துள்ளார்.