மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? நிதித்துறை இணை அமைச்சர் பதில்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? நிதித்துறை இணை அமைச்சர் பதில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? நிதித்துறை இணை அமைச்சர் பதில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதிய குழு? நிதித்துறை இணை அமைச்சர் பதில்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்கான 8 வது ஊதியக் குழு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8வது ஊதிய குழு:

7வது ஊதிய குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமும் , ஜூலை மாதமும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. தேசிய அளவில் பணவீக்க விகிதம் உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

மேலும் கடந்த சில நாட்களாக அரசுத் துறைகளில் 8வது ஊதியக் குழு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. அதாவது எட்டாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றத்தை காண முடியும். ஊழியர்களின் ஊதியத்தை தீர்மானிப்பதில் பிட்மெண்ட் பேக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள திருத்தம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான 8வது மத்திய ஊதியக் குழுவின் அமைப்பு குறித்த தெளிவின்மை குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ளார்.

EPFO ஓய்வூதியதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 3 மடங்கு ஓய்வூதிய உயர்வு? முழு விவரம் இதோ!

ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 8வது மத்திய ஊதியக் குழு இருக்காது என்ற கூற்றை சவுத்ரி மறுத்துள்ளார். அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்துவதற்காக 8வது மத்திய ஊதியக் குழுவை (சிபிசி) அமைக்க வேண்டாம் என்று அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்பது உண்மையா” என்ற கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “இல்லை” என்றார். இதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய 8 வது ஊதியக் குழுவை அமைக்கும் யோசனை இப்போது இல்லை. ஆனால், புதிய பார்முலா மூலம், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்படும் என கூறினார்.

இனி ஊழியர்களின் சம்பளம் Aykroyd சூத்திரம் மூலம் தீர்மானிக்கப்படும். இந்த சூத்திரத்தின் மூலம், ஊழியர்களின் சம்பளம் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பணியாளரின் செயல்திறன் ஆகியவற்றுடன் இணைக்கப்படும். அதாவது, ஊழியர்களின் பதவி உயர்வும் அதற்கேற்ப செய்யப்படும். இருப்பினும், நிதி அமைச்சக அதிகாரி ஒருவர், பரிந்துரை நல்லது, ஆனால் அத்தகைய சூத்திரம் எதுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று கூறுகிறார். மறுபுறம், 8வது ஊதியக் குழுவும் எப்போது வரும் என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!