மத்திய அரசின் 861 காலிப்பணியிடங்களுக்கான UPSC தேர்வு – பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
இந்தியாவில் மத்திய அரசின் குடிமை பணியியல் தேர்வு மூலம் இந்த ஆண்டு 861 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
UPSC:
இந்தியாவில் மத்திய அரசால் ஆண்டுதோறும் UPSC எனப்படும் குடிமை பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசில் பெரும்பாலான பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் UPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று முன்று கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ஜூன் மாதம் UPSC முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 & VAO பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு..!
இந்த வருடம் 861 காலிப்பணியிடங்கள் UPSC தேர்வின் மூலம் நிரப்படும். இந்த தேர்வை எழுத விரும்புவர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST/OC பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்த UPSC தேர்வின் முதல் கட்ட முதல் நிலை எழுத்து தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், புதுவை ஆகிய இடங்களில் நடைபெறும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட முதன்மை தேர்வில் பங்கேற்க முடியும்.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு விடுமுறை, பிற மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
இரண்டாம் கட்ட தேர்வானது சென்னையில் மட்டுமே நடைபெறும். www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக பிப்ரவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100. செலுத்த வேண்டும். SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.