இந்திய அலுவலக நிர்வாகங்களுக்கு ஷாக் – அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா!

0
இந்திய அலுவலக நிர்வாகங்களுக்கு ஷாக் - அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா!
இந்திய அலுவலக நிர்வாகங்களுக்கு ஷாக் - அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா!
இந்திய அலுவலக நிர்வாகங்களுக்கு ஷாக் – அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா!

இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் 86% ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக வேலைகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் ராஜினாமா:

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்து வருகிறது. இதற்கிடையில் இந்நிறுவனங்களில் புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் 86% ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக வேலைகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான மைக்கேல் பேஜ் அறிக்கை அளித்துள்ளது.

இந்தியாவில் விமான பயணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

அதாவது, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை தற்போது ஊழியர்களுக்கு சவுகரியத்தை கொடுத்திருப்பதால் அவர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதை கடினமாக உணருகிறார்கள். அதனால், WFH முறையை முடிக்க சொல்லி நிறுவனங்கள் அழைப்பு விடுத்தால் அவர்கள் தங்களது வேலைகளை விடவும் தயாராக இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகிறது. இந்த போக்கு நடப்பு ஆண்டில் சந்தைகள், தொழில்கள், சீனியாரிட்டி அளவுகள் மற்றும் வயதுக் குழுக்களில் தொடரும் என்று இந்த நிறுவனம் கணித்துள்ளது.

இதற்கிடையில் ஹைப்ரிட் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற உலக மாதிரியைப் பற்றி இதுவரை ஒரு நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, கொரோனா தொடர்பான விதிமுறைகளும் ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. இப்போது வேலையில் இருந்து ராஜினாமா செய்த அல்லது ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளவர்களில் 11% பேர் மட்டுமே அவர்கள் வெளியேறுவதற்கான காரணம் தொழில் முன்னேற்றம், அதிக ஊதியம், பங்கு மாற்றம் என குறிப்பிடுகின்றனர். உண்மையில், சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் வெகுமதிகள் ஆகியவை ஊழியர்களுக்கான உந்துதலாகும்.

Exams Daily Mobile App Download

இப்போது இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 61% பணியாளர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை இருந்தால், குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொள்வதோடு பதவி உயர்வைக் கூட கைவிடுவார்கள் என்று ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது. இதனிடையே பணியாளர்கள், தற்போதைய வேலையை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள நாடுகளில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளன. இதில் குறிப்பாக தனியார் துறையுடன் ஒப்பிடும் போது பொதுத்துறை பணியாளர்களே வேலையை விட்டு விட அதிக விருப்பம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!