தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் – இன்று வருகை!
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 ஆம் கட்டமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு கூடுதலாக 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் இன்று (ஜூன் 10) சென்னைக்கு வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்
நாடு முழுவதும் தற்போது 3 ஆம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி துவங்கி முதல்கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்கள், மருத்துவர், சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து 2 ஆம் கட்ட தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டது.
பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
தற்போது 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக, மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலங்கள் தோறும் செலுத்தப்பட்டு வந்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, மத்திய அரசு விநியோகம் செய்து வந்தது. அதன் படி மாநிலம் முழுவதும் இதுவரை 1.01 க்கும் அதிகமாக தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் கையிருப்பில் இருந்த 12 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்றுடன் (ஜூன் 9) முடிவடைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழகத்தில் இன்று (ஜூன் 10) முதல் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசிடம் கேட்டிருந்த கூடுதல் தடுப்பூசிகள் தமிழகம் வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. இந்த சூழலில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்துள்ளது. இவற்றை மாவட்டங்கள் தோறும் பிரித்து அனுப்பப்பட்ட பிறகு, நாளை (ஜூன் 11) முதல் தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.