இந்தியாவில் ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழப்பு – 84,332 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழப்பு - 84,332 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழப்பு - 84,332 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழப்பு – 84,332 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடத்தை விட பாதிப்புகள் அதிகமாக உள்ளது. தற்போது பரவி வரும் வைரஸ் உருமாறிய கொரோனா என்பதால் இது அதிக வீரியத்துடன் பரவுகிறது என பெருந்தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் முழுவதும் முழு ஊரடங்குகள் அமலில் உள்ளது. மக்கள் அலட்சியமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் நோயின் தீவிரம் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு மாணவர் பட்டியல் திருத்தம் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு!!

மேலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 18 வயது முதல் அனைவருக்கும் இலவசமாக மாநிலங்கள் தோறும் 2 டோஸ்களாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகளின் விளைவாக 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு இன்று 1 லட்சசத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி மத்திய சுகாதாரத்துறை நாடு முழுவதும் கடந்த 24 மணிநேர கொரோனா பாதிப்பு விபரங்களை வெளியிட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்திய முழுவதும் 84,332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மொத்தமாக நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 2,93,59,155 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த போதிலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,67,081 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,21,311 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,79,11,384 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 10,80,690 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக 24,96,00,304 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!