காவல் துறையில் 835 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
டெல்லி காவல் படையில் தலைமை காவலர் பணியில் காலியாக உள்ள 835 காலிப்பணியிடத்திற்கான ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணியிட தோ்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
தலைமைக் காவலர் தேர்வு:
இந்தியாவில் தற்போது அதிகரிக்கும் விலைவாசிக்கு மத்தியில் மாத வருமானம் போதாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். வேலையினால் கிடைக்க கூடிய மாத ஊதியம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளையும் பொருட்களை கூட வாங்கி முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க தொடங்கியதும் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி அலையத் தொடங்கினர். இவர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லி காவல் படையில் தலைமை காவலர் பணியில் 835 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கு ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதி தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நான்கு நிலைகளாக நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வு – மே 31ம் தேதி அறிவிப்பு?
இத்தோ்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ. 42,000 வரை ஊதியம் வழங்கப்படும். இதில் SC /ST மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மகளிருக்கு அனைத்து பிரிவினருக்கும் தேர்வுக்கான கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப் படுகிறது. இது குறித்த விவரங்களை இணையதளம் வாயிலாக பெறலாம். அதனை தொடர்ந்து கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 94838 62020 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.