இந்திய ஊரக வங்கிகளில் உள்ள 8285 காலிப்பணியிடங்கள் – IBPS முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் ஊரக வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களின் பஎண்ணிக்கையை IBPS 8285 ஆக அதிகரித்துள்ளது. தற்போது காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் தற்போது அதிகரிக்கும் விலைவாசிக்கு மத்தியில் மாத வருமானம் போதாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். வேலையினால் கிடைக்க கூடிய மாத ஊதியம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளையும் பொருட்களை கூட வாங்கி முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க தொடங்கியதும் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி அலைய தொடங்கினர். இந்த நிலையில் IBPS ஊரக வங்கிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் ஏராளமானோர் வங்கிகளில் வேலைவாய்ப்பு பெற முடியும். இது குறித்து IBPS வெளியிட்ட அறிக்கையில் பிராந்திய ஊரக வங்கிகளில் குரூப் ‘A’ அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் குரூப் ‘B அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆகிய பதவிகளுகளில் 8,106 பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் வாயிலாக ஜூன் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அளவுகோல்-II நிலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் உண்டு. அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்தப்படும். அளவுகோல் II மற்றும் III பணிக்கான தேர்வு ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 24ம் தேதி நடத்தப்படும். நேர்காணல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.