அரசு மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் வேலைவாய்ப்பு – 8000 பேர் விண்ணப்பம்!
கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள 6 பிணவறை உதவியாளர்கள் பணிக்கு சுமார் 8000 பேர் விண்ணபித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கு வங்கத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை பிரதிபலிக்கிறது.
மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 பிணவறை உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவமனை நிர்வாகம் கடந்த டிசம்பர் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு மொத்தம் இதுவரை 8000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து சிரமப்படுகின்றனர்.
உள்ளூர் ரயில்கள் இயங்க அனுமதி? கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு? – மாநில அரசு திட்டம்!
இதனால் மேற்கு வங்கத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும் ஊதியமாக மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பிணவறை உதவியாளர் பணிக்கு 100 பொறியாளர்கள், 500 முதுநிலை பட்டதாரிகள், 2,000 பட்டதாரிகள் என மொத்தம் 8,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பிணவறை உதவியாளர் பணிக்கு முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது, மேற்கு வங்கத்தின் வேலையின்மை நிலையை பிரதிபலிக்கிறது. பல்வேறு கலந்தாய்வுகளுக்கு பிறகு 8000 பேரில் 784 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும், இதற்கு முன் பிணவறையில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.