கொரோனா 2ம் அலையில் மட்டும் 8000 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கையை திருத்திய மாநிலம்!
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 5500க்கும் குறைவு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அம்மாநில சுகாதாரத்துறை பலி எண்ணிக்கையை திருத்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகார் மாநிலம் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் மாநிலமாக இருந்தது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலையில் பீகார் மாநிலத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் உயிர் சேதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார் மாநிலத்தில் டப்லிங் ரெட் எனப்படும் இரட்டிப்பு வேகத்தில் தொற்று பரவுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் முகக்கவசம் அணிய தேவையில்லை – DGHS அறிவிப்பு!
மேலும் பீகார் மாநிலத்தில் தொற்று அதிக அளவில் காணப்பட்டு வந்த போது உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்தது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 2ம் அலை தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5500க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக சுமார் 4000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
உயிரிழப்பு எண்ணிக்கையை சரிபார்ப்பிற்கு பின்பு பீகார் சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, தொற்றினால் இதுவரை 9,429 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் மட்டும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.