உக்ரைன், ரஷ்யா இடையே 2வது நாளாக தொடரும் போர் – 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு!
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி உக்ரைன் நாட்டில் பல பகுதிகளில் ரஷ்ய படைகள் குண்டு வீசினர். இதையடுத்து தற்போது இந்த போரில் 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர இருப்பதால் இதனை எதிர்த்து ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தது. மேலும் நோட்டா அமைப்பில் எப்போதும் சேர மாட்டோம் என்று உக்ரைன் உறுதி அளித்தால் இந்த போர் நடைபெறாது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் நாடானது நோட்டா அமைப்பில் உறுதியாக சேர உள்ளோம் என்று தெரிவித்து இருப்பதால் நேற்று ரஷ்யா அதிபர் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று உக்ரைன் தலைநகர் மீதும் மற்றும் பல பகுதிகளிலும் ராணுவ படைகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழக மக்களுக்கு கருணைத்தொகை ரூ.24,000 ஆக அதிகரிப்பு – அரசின் அதிரடி அறிவிப்பு!
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையில் உள்ளது. மேலும் இந்த தாக்குதலால் பல்வேறு உயிர் சேதங்கள் ஏற்படும் என்றும் பல நாடுகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று முதல் நாள் போர் தொடங்கியதை தொடர்ந்து உக்ரைனில் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான நிலையங்கள் அழிக்கப்பட்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு நிலைகளை கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் ரஷ்யா தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 800 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவத்தின் 30 போர் டாங்குகள் அழிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய விமானப்படையின் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களும் சுட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று 2வது நாளாக இரு நாடுகளுக்கிடையே போர் தொடர்கிறது. இதனால் மேலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது