தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு ரத்து? 86,342 பேர் கருத்து!
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் 3ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
நீட் தேர்வு ஆலோசனை கூட்டம்:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்து 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் இனி வாழைப்பழம்? அமைச்சர் விளக்கம்!
தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளதா? என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த குழுவின் 3வது ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுடன் பேசிய நீதிபதி ஏ.கே ராஜன் நீட் தேர்வு குறித்து 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என கூறினார். மேலும் அனைத்து கருத்துக்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளளோம். ஒரு மாதத்திற்குள் ஆய்வை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் 4ம் கட்ட ஆலோசனை கூட்டம் ஜூலை 4ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.