சென்னை துறைமுகத்தில் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அமைச்சர் தகவல்!
சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் துறைமுகத்தில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மீனவ மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை திருவொற்றியூர் குப்பத்தில் புதிய துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசின் நிதி உதவியுடன் சுமார் 200 கோடி செலவில் துறைமுக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மேற்பார்வையிட்டார்.
WhatsApp செயலியில் புதிய அப்டேட் – புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் வசதி!
அப்போது தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய துறைமுகத்தின் மூலம் சுமார் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், திருவொற்றியூர், தரங்கம்பாடி மற்றும் நாகை மாவட்டங்களில் நடைபெற்று வரும் துறைமுக கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் வலியுறுத்தினார்.
T20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்!
தொடர்ந்து மீனவ மக்களிடையே கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மத்சய சம்பத யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவர் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டார். இந்த சந்திப்பின் போது தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கூடுதல் செயலர் ஜவகர், மீன்வளத்துறை இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.