உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேருக்கு பதவி உயர்வு – மத்திய அரசுக்கு பரிந்துரை!
நாட்டில் ஒரே நேரத்தில் 8 பேருக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 28 உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
கொலிஜியம் பரிந்துரை:
நாட்டின் உச்ச அதிகாரம் பெற்ற உச்ச நீதிமன்றம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் தலைநகரங்களில் உயர்நீதிமன்றங்கள் அமைத்துள்ளது. மேலும், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் விரைவில் வழக்குகள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் உயர்நீதிமன்றத்தின் கிளைகள் மற்ற மாவட்டங்களிலும் அமைக்கப்ட்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உயர்நீதிமன்ற கொலிஜியம் புதிய பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,669 பேருக்கு கொரோனா உறுதி; பலி எண்ணிக்கை 17- சுகாதாரத்துறை அறிக்கை!
அதன்படி, தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலிஜியம், ஒரே நேரத்தில் எட்டு நீதிபதிகளை பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வளிக்க பரிந்துரை செய்துள்ளது. தொடர்ந்து தற்போதைய ஐந்து தலைமை நீதிபதிகள் மற்றும் 28 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் கடந்த நாட்களில் நீதித்துறையில் உள்ள காலியிடங்கள் அவசரகால அடிப்படையில் நிரப்பப்படும் என்று கூறினார்.
TN Job “FB Group” Join Now
பதவிஉயர்வு பரிந்துரையில், நீதிபதி ராஜேஷ் பிண்டால் (அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா (கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா (ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி (கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி சதீஷ் சந்திர சர்மா (தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி ரஞ்சித் வி. மோர் (மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி அரவிந்த் குமார் (குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி), நீதிபதி ஆர்.வி.மலிமத் (மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி) போன்ற 8 நீதிபதிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.