மாநில அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி (DA) உயர்வு – தீபாவளி பரிசு!
மத்திய பிரதேச மாநில அரசுத்துறையில் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பரிசாக 8% அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ்
வரவிருக்கும் நவம்பர் மாதம் 4ம் தேதியன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து ஒவ்வொரு மத்திய மற்றும் மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 8% DA உயர்வுத்தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.20.202/- ஊதியம்!!
இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் கடந்த அக்.21ம் தேதியன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநில அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வுடன், கோவிட் தொற்றுநோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு இன்கிரிமென்ட்களில் பாதி நிலுவைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. அதாவது கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறை காரணமாக இந்த சலுகைகளை அரசு நிறுத்தி வைத்திருந்ததாக முதல்வர் சிவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இப்போது மாநில அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட DA தொகை 12% இலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த தொகை நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகளின் 50% தொகை அக்டோபர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மீதமுள்ளவை பிப்ரவரி 2022க்கான சம்பளத்துடன் மார்ச் மாதத்தில் வழங்கப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.