இன்று முதல் ஜன.16 வரை 8 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் இன்று (ஜன. 8) முதல் ஜனவரி 16ம் தேதி வரை 8 நாட்களுக்கு பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறையை அறிவிப்பு
மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா 3ம் அலைத்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் தெலுங்கான மாநில அரசு தற்போது சங்கராந்தி கொண்டாட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலத்தில் வழக்கமாக ஒவ்வொரு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்படும் விடுமுறைகள், இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என தெலுங்கானா அரசு கடந்த ஜனவரி 3ம் தேதியன்று அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சூப்பர் நியூஸ் – மேரா ரேஷன் ஆப் பதிவிறக்கம் & அம்சங்கள்!
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, ஜனவரி 11 முதல் சங்கராந்தி விடுமுறையை அளிக்க அரசு முடிவு செய்த அரசாங்கம் ஒமிக்ரான் வழக்குகளை கவனத்தில் கொண்டு ஜனவரி 8 முதல் விடுமுறையை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போது அரசின் உத்தரவுப்படி, இன்று (ஜன.8) முதல் ஜனவரி 16 வரை மருத்துவக் கல்லூரிகள் தவிர அரசு, தனியார், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2022 ஜனவரி DA 3% அதிகரிப்பு!
இதற்கிடையில் உயர்மட்ட கூட்டத்திற்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா முதல்வர் மக்கள் ஒமிக்ரான் வழக்குகள் குறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும், முகக்கவசங்களை அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வைரஸ் பரவலை சமாளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய அவர் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்து சோதனைக் கருவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.