தமிழக அரசு சார்பில் ரூ.50000 ரொக்கம் & 8 கிராம் தங்கம் – சூப்பர் திட்டம்! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் விதவை மறுமணம் செய்தால் அரசு சார்பாக நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.50,000 ரொக்கமும் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது.
விதவை மறுமணம்:
தமிழகத்தில் பெண்களுக்காக அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது திமுக தலைமையிலான அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகளில் மாதம் ரூ.1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி பட்டப்படிப்பு படிப்பு முடித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ரூ.62000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
மேலும் 12ம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.25,000 ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இத்திட்டத்தில் விண்ணப்பித்தால் மட்டுமே சலுகையை பெற முடியும். குறிப்பாக திருமணத்திற்கான பத்திரிகையை ஆவணங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற திட்டங்களை தொடர்ந்து தற்போது தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிப்ரவரி 21 முதல் முழு ஊரடங்கு? பிரதமர் விளக்கம்!
மேற்கண்ட திட்டத்தை போலவே இந்த திட்டத்திலும் 50,000 ரொக்கமும், 8 கிராம் தங்கமும் வழங்கபடுகிறது. மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு இது முதல் திருமணமாக இருக்க வேண்டும் . மறுமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்திலும் பட்டதாரிகளுக்கு 50,000 ரூபாயும் அதற்கு கீழ் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும்.