மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதிய விகிதத்தின்படி அலவன்ஸ் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதிய விகிதத்தின்படி அலவன்ஸ் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இப்போது இந்த நடவடிக்கைகளை அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஓய்வூதியம் அறிவிப்பு
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் இது போன்ற நல்ல செய்திகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு நிறுவனங்கள், வாரியங்கள், தன்னாட்சி அமைப்புகள், கார்ப்பரேஷன்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த ஓய்வூதியம் பெறுவோர் இனி 7வது ஊதிய விகிதத்தின்படி ஓய்வூதியம் பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு!
இது ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அரசின் ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக்குழுவின்படி தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே போல பல மாநிலங்களை சேர்ந்த ஓய்வூதியர்களும் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். இப்போது ராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையால், மாநிலத்தின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏப்ரல் 1, 2022 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசு அளித்துள்ள ஒப்புதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ஏப்ரல் 11, 2022 தேதியிட்ட உத்தரவில், மற்ற நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறையால் வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் அரசாங்கத்தின் நிதித்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அரசு, தனது ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுப்பதாக அறிவித்திருந்தது. மேலும், ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஸ்கர் அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.