மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை – 7வது ஊதியக்குழு அறிக்கை! இதுதான் நிபந்தனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் அல்லாது பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தவிர ரூ.30,000 ஊக்கத்தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.30,000 வரை ஊக்கத்தொகை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற வசதிகள் உள்ளடங்கி உள்ளது. அதே சமயம் சம்பளம் மட்டும் அல்லாது ஊக்கத்தொகை வடிவிலும் ஊழியர்கள் பெரும் தொகையினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக உயர்கல்விக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயர்கல்வி படித்தால், அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 13ம் தேதி கடைகள் அடைப்பு!
அந்த வகையில் தற்போது உயர் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களுக்கு, அரசு ஊக்கத் தொகையை 5 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஊக்கத் தொகையானது Phd போன்ற உயர்கல்விகளுக்கு பொருந்தும். இந்த ஊக்கத் தொகை தான் 10,000 ரூபாயில் இருந்து 30,0000 ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 20 ஆண்டுகால விதிகளை 2019 ஆம் ஆண்டு பணியாளர் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு இந்த ஊக்கத் தொகை பழைய விதிமுறைகளின் படி, 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திருத்தத்திற்கு பிறகு இனி ஊழியர்கள் அதிக ஊக்கத் தொகையினை பெறலாம்.
- 3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான டிப்ளமோ படிப்பினை முடித்தால் – ரூ.10,000 ஊக்கத்தொகை
- 3 ஆண்டுகளுக்கு மேலான பட்டம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு – ரூ.15,000 ரூபாய் ஊக்கத்தொகை
- 1 வருடம் அல்லது குறைந்த முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு – 20,000 ரூபாய்
- 1 வருடத்திற்கு மேலான முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு – 25,000 ரூபாய் ஊக்கத்தொகை
- பி.ஹெச் டி அல்லது அதற்கு இணையான படிப்புகளுக்கு 30,000 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும்.