மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 7வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி எப்போதும் மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். இந்த சம்பள உயர்வினால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெறலாம் என கூறப்படுகிறது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
கொரோனா காலகட்டத்தில் மட்டுமே அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மேலும், பல மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஃபிட்மென்ட் காரணி என்பது மத்திய அரசு ஊழியர்களின் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஊழியர்களின் சம்பளம், ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர ஃபிட்மென்ட் காரணி மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு ஊழியரின் மாத சம்பளம் ரூ.18,000 எனில் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக உயர்த்தினால் ரூ.26,000 வரைக்கும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்படுமா என்பது சந்தேகமே. ஆனாலும், மத்திய அரசு ஊழியர்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.