தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 76 லட்சம் பேர் – முக்கிய புள்ளி விபரங்கள் வெளியீடு!
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை 76,35,059 பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது பாலினம் மற்றும் வயது வாரியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை இப்பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமாகும். பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும் இல்லையெனில் அந்த பதிவு உபயோகமற்றதாகி விடும். உரிய காலக்கெடுவுக்குள் புதுப்பிப்பதன் மூலம் பதிவு முன்னுரிமை அடிப்படையில் அரசின் சில துறைகளில் பணி வழங்கப்படும். தற்போது 10 ம் வகுப்பு முதல் பள்ளிகளிலேயே மாணவர்கள் பதிவு செய்து விடுகின்றனர். அதன் பிறகு ஆன்லைன் மூலம் புதுப்பித்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் அவ்வப்போது தங்களது கல்வித் தகுதிகளையும் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளலாம். கடந்த வருடம் 2014, 2015, 2016, 2017,2018,2019 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்து கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுவரை தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் 76,35,059 பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதில் ஆண்கள் 35,67,820 பேர், பெண்கள் 40,67,820 பேர், மூன்றாம் பாலினத்தவர் 239 பேர் ஆவார்கள் இவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 16,09,890, 19 முதல் 23 வரை உள்ளவர்கள் 17,83,755, 24 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 28, 93, 506, 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13,35,649, 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 12,259 பேர் என்று புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.