75 – வது சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை – இறுதிக்கட்ட ஏற்பாடு தீவிரம்!
இந்தியாவில் 75 -வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் தலைநகர் சென்னையில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
அணிவகுப்பு ஒத்திகை:
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டுக்காக ரத்தம் சிந்திய வீரர்களையும், உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூறும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது துறைவாரியாக பல்வேறு விருதுகள் அளிக்கப்படும். இந்த நிலையில் பொது மக்களிடம் பேசிய பிரதமர் அவர்கள் சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் தேசிய கொடியை முகப்பு படமாக (DP) வைக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற அனுமதி வழங்கி உள்ளார். இதையடுத்து இந்த ஆண்டு தேசிய கொடி விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் தலைநகரங்களில், முதல்வர் தேசிய கொடியின் ஏற்றி மரியாதை செலுத்துவார். அதன் தொடர்ச்சியாக அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் தமிழகத்தில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் சுதந்திர தின இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. கடந்த 6, 11, 13ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் உடல் தமிழகம் வருகை – இன்று நல்லடக்கம்!
Exams Daily Mobile App Download
அதன்படி கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து இறுதி கட்ட ஒத்திகை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் படை வீரர்களின் அணிவகுப்பு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம்பெற்றது. மேலும் கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.