75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி? அரசு முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சுதந்திர தின கொண்டாட்டம்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த நாளில் நமது தேச தலைவர்கள் பல தியாகங்களை செய்து சுதந்திரம் வாங்கி கொடுத்த நிலையில் அதை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. தமிழக அரசு சென்னை மெரினா கடற்கரையில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொடியேற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள் நிகழ்ச்சியை காண அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக கொடியேற்ற இருக்கிறார்.
தமிழகத்தில் மாணவர் உதவி எண்கள் அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
மேலும் இந்த ஆண்டு பொதுமக்கள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதனை கடைபிடித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.