தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு பேருந்தில் 75% கட்டண சலுகை – வரவேற்கும் மக்கள்!
தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வரும் நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தில் 75% சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதனைத்தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவிதொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சர்க்கரை நாற்காலிகளில் செல்ல ஏதுவாக புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் TNUSRB எழுத்துத்தேர்வு – இன்று துவக்கம்! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு!
இந்த பாதையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (நவ.27) திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட இப்பாதை திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். மேலும் மாற்றுத்திறனாளிகள் ஏறி பயணிக்க ஏதுவாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.