இந்தியாவிற்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் – உலக சுகாதார அமைப்பு தகவல்!!
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் அவர்கள் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.
மாடர்னா தடுப்பூசி:
கடந்த ஆண்டு தொடக்கம் முதல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. இந்த தொற்றின் தாக்கம் அதிக அளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியது. அதன் விளைவாக கடந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போட்டுக் கொள்ள மக்கள் அதிக ஆர்வமில்லாமல் இருந்தனர்.
தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பு – மின் நுகர்வோர் அதிர்ச்சி !!
தற்போது தடுப்பூசி போடுவது ஒன்று தான் நோயிலிருந்து பாதுகாக்கும் ஒரே வழி என்று மக்கள் அறிந்து கொண்ட பின்னர், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் அவர்கள் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஆனால் எப்போது வழங்கப்பட உள்ளது என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. மத்திய அரசின் அனுமதியின்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிஅயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.