இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கி – பிரதமர் மோடி இன்று திறப்பு!
கடந்த சில ஆண்டுகளாகவே டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா முன்னணி வகித்து வருகிறது. மேலும் இந்தியாவின் டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகள் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
டிஜிட்டல் மயம்:
இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு டிஜிட்டல் மயமாக்கல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தொற்று அச்சத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இந்த நேரத்தில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வாயிலாக அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர்.
பிக்பாஸ் சீசன் – 6 – இந்த வார வைல்டு கார்டு என்ட்ரி யார் தெரியுமா? இனி ஒரே காமெடி தான்!
குறிப்பாக பண பரிமாற்றம் ஆன்லைன் வாயிலாகவே செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பு பாராட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் வங்கி குறித்து பேசிய அவர், வங்கிகளே ஏழைகளின் வீட்டு வாசலுக்கு செல்லும் என்று முடிவு செய்து அதன்படி முதலில் ஏழைகள் மற்றும் வங்கிகளுக்கான தூரத்தை நாங்கள் குறைத்தோம். பிறகு தொலைதூர பகுதிகளுக்கு வங்கிகளை கொண்டு செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று கூறினார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் படி 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று பிரதமர் மோடி அவர்கள் காணொளி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த டிஜிட்டல் பேங்கிங் வசதிகள் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் டிஜிட்டல் வங்கியியல் கிளைகள் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக கொண்டு சேர்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்