நாடு முழுவதும் 740 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள் விரைவில் தொடக்கம் – அரசின் திட்டம்!
பிற்ப்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் அதிக அளவில் கல்வி கற்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசு நாடு முழுவதும் 740 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மாதிரி பள்ளிகள்:
நாடு முழுவதும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் எந்த விதமான தடங்களும் இல்லாமல் தரமான கல்வியை கற்று, வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு 392 ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் தற்போது இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது 1.05 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் நாளை (நவம்பர் 16) உள்ளூர் விடுமுறை – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதேபோல், 20,000 ST வகுப்புகளை சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது. இதன்மூலம் 740 ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் 3.5 லட்சம் மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்பதை அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் அமைச்சர், ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் தினமான இன்று நடந்துள்ள விழாவில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.