இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 7,219 பேர் பாதிப்பு!

0
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 7,219 பேர் பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 7,219 பேர் பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 7,219 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மேலும் தினசரி ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று மக்களை மிகவும் பாதித்து வருகிறது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த நோயினை கட்டுக்குள் கொண்டு வர அரசு ஒரு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதாவது, ஊரடங்கு, பொதுமுடக்கம் போன்றவைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மக்கள் வேலைகளை இழந்து வீடுகளில் முடங்கி கிடந்தனர். இதனை தொடர்ந்து வேலைவாய்ப்புகள் இல்லாததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில் நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டது. இதனால் தொற்றின் வீரியம் குறைய தொடங்கியது. மேலும் கொரோனாவால் ஏற்பட்டு வந்த உயிரிழப்புகளும் குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வர தொடங்கியது. தற்போது கொரோனா பரவலின் ஒரு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

செழியனை விட்டு பிரிய நினைக்கும் ஜெனி, அடுத்த அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

அந்த வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 7,219 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 59,210-லிருந்து 56,745 ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் 9,651 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 33 பலியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை 5,27,965 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!