நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழப்பு – கொரோனா 2ம் அலை தீவிரம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 719 மருத்துவர்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 21 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் சங்கத்தின் பதிவுகள் தெரிவிக்கிறது.
மருத்துவர்கள் மரணம்:
கொரோனா என்ற கொடிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது ஒரு தொற்று நோயாகும். எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. பல்வேறு கட்ட ஊரடங்குகளை அறிவித்து மக்களை காக்க அரசு முயற்சித்து வருகிறது. மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நோய் பரவும் என தெரிந்தும் பொது நலத்தோடு உயிர்காக்கும் பணியை செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
நோய்த்தடுப்பு பணியில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாததாகும். தொற்று பரவல் காலத்திலும் தங்கள் குடும்பங்களை மறந்து மக்களுக்காக கொரோனாவுடன் போராடி வருகின்றனர். மக்களின் உயிரை காக்க இரவு பகல் பாராது, காற்று புகாத உடைகளை அணிந்து பணி செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளை அனைவரும் ஒதுக்கி வைத்து பக்கத்தில் வர கூட பயப்படுகிறார்கள். ஆனால் மருத்துவர்கள் தொற்று நோய் என தெரிந்தும் தொட்டு சிகிச்சை அளிக்கின்றனர். தன் உயிரை சிறிதும் பொருட்படுத்தாமல் என் பணி மருத்துவம் செய்வதே என சேவை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தரம் உயர்வு – அரசாணை வெளியீடு!
தற்போது கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என மருத்துவர்கள் சங்கம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா இரண்டாம் அலையால் 21 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவை பதிவு செய்யப்பட்டவை, பதிவு செய்யப்படாமல் உள்ள மரணங்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். தொடர்ந்து நிகழும் மருத்துவர்களின் உயிரிழப்புகள் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.