இந்தியாவில் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா தொற்று – 3,921 பேர் பலி!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்த செய்தி மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்து வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அனைத்து மாநில/யூனியன் பிரதேச பகுதிகளில் குறைந்து வருகிறது. இதனால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1 லட்சத்திற்கு குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 16 முதல் மீண்டும் துவங்கும் ரயில் சேவைகள் – செந்தூர், தேஜஸ் ரயில்கள் இயக்கம்!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,95,10,410 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 3,921 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,74,305 ஐ எட்டியுள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,19,501 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,81,62,947 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 9,73,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,48,49,301 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.