தமிழகத்தில் புதிதாக 7000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தொழிற்பேட்டைகள்!
தமிழகத்தில் ரூபாய் 218.22 கோடி செலவில் திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 394 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தொழிற்பேட்டைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். கொரோனாவால் சிறு, குறு வணிக நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தங்கள் பணியாளர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பொருளாதாரம் சரிவடைந்துள்ளதால் மீண்டும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில் மீண்டும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு – மாலை நிலவரம்!
அந்த வகையில் தமிழகத்தில் ரூபாய் 218.22 கோடி செலவில் திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 394 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். இந்த 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 7000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிப்காட்டிடமிருந்து 120 ஏக்கர் நிலம் பெறப்பட்டு ரூ.85 கோடி திட்ட மதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 2,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில் 98 ஏக்கரில் ரூ.45.94 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதனால் 1,500 நபர்கள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். நீட்ஸ் திட்டத்தில் தொழில் முனைவோர் மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார்.