தமிழக அரசு வழங்கும் ரூ.7000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
அரசு உதவித்தொகை:
தமிழக அரசு மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி கூறியுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி தகுதிக்கேற்ப உதவித்தொகை வழங்கப்படும். அது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அக்.1 முதல் செக் புக் நிறுத்தம்!
இந்த உதவித்தொகை ஆனது சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இளம் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக்., பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1000 முதல் ரூபாய் 7000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுடைய மாணவர்கள் http://www.chennai.nic.in/ என்ற இணையதளத்தில் அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் என்ற பகுதியில் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் அல்லது கல்வி நிலைய முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று உரிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 எனும் முகவரியில் விண்ணப்பிக்கும் படி சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – இன்று முதல் 4 நாட்களுக்கு!
ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ரூபாய் 7000 முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு scholorship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்கள் 15.11.2021க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.