ICC T20 உலக கோப்பை போட்டியில் 70% ரசிகர்களுக்கு அனுமதி – அதிகாரபூர்வ அறிவிப்பு!
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் டி20 உலகக் கோப்பையில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஐசிசி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ஐசிசி உலக கோப்பை:
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்ற உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இது குறித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வந்த நிலையில் துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பணி தேடுவோர் கவனத்திற்கு – பால்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்!
தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்த பிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23 முதல் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக பார்வையாளர்களை அனுமதிக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை போட்டியில் 70% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
PF பயனர்கள் கவனத்திற்கு – குழந்தைகளின் மேற்படிப்புக்கு முன்பணம் பெறுவது எப்படி?
தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் குறைவான அளவு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக பார்வையாளர்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பார்வையாளர்களை அதிகப்படுத்தும் முயற்சியில் அபுதாபி மைதானத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.