தமிழக மருத்துவத் துறையில் புதிதாக 7,296 காலிப்பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!

0
தமிழக மருத்துவத் துறையில் புதிதாக 7,296 காலிப்பணியிடங்கள் - அரசாணை வெளியீடு!
தமிழக மருத்துவத் துறையில் புதிதாக 7,296 காலிப்பணியிடங்கள் - அரசாணை வெளியீடு!
தமிழக மருத்துவத் துறையில் புதிதாக 7,296 காலிப்பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் புதிதாக 7,296 பணியிடங்கள் மருத்துவத் துறையில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பணியிடம் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

7,296 காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் திமுக.ஆட்சியை பிடித்ததில் இருந்து மக்களின் நலன் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவத்துறை, பள்ளிக் கல்வித்துறை, இந்து அறநிலையத்துறை போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மருத்துவத் துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் பயனடைந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டுக்கு முன் சம்பள உயர்வு – 7வது ஊதியக்குழு பரிந்துரை!

இது குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் மருத்துவத் துறையில் புதிதாக 7,296 பணியிடங்கள் நிரப்பும் விதமாக வெளியிடப்பட்ட அரசாணையின் பேரில் விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே சட்ட பேரவை கூட்டத்தொடரில் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி 4,848 செவிலியர்கள், 2,448 சுகாதார பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

மேலும் கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பணியில் 4,570 செவிலியர்கள் மற்றும் 1,646 சுகாதார பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம் என்றும், அவர்கள் இக்கட்டான நிலையில் பணிபுரிந்த காரணத்தால் தேர்வுகளில் கருணை அடிப்படையில் 20 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலே நிரப்பப்பட உள்ளது. அதனால் யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!