அக்.3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை – 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதால் அக்டோபர் 3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. கடந்த கல்வியாண்டில் இறுதி தேர்வுகள் அனைத்தையும் அரசு ரத்து செய்து மாணவர்கள் தேர்வின்றி பெற்றதாக அறிவித்தது. நடப்பு கல்வி ஆண்டான 2021- 2022ல் ஆன்லைன் வகுப்புகள் ஜூன் மாத நடுப்பகுதியில் தொடங்கியது. தொடர்ந்து கொரோனா 2ம் அலையின் பரவல் அதிகரித்து வந்ததால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இருப்பினும், பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தமிழகத்திலும் தொற்றின் பாதிப்பு குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு பல கட்ட தீவிர ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்தது. அதன்படி, செப்டம்பர் 1ம் தேதியான நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்க உத்தரவிட்டது. பள்ளிகள் திறப்புக்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் வசதி – Save செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி முழுவதுமாக மூடப்பட்டு சுத்திகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதால் அக்டோபர் 3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் தோற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.