அரசு பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் ஆங்காங்கே மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 7 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி கோரத்தாண்டவம் ஆடியது. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதற்க்ட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து நோய்த்தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
தமிழகத்தில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகளில் வட்டி விகிதம்!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இருப்பினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக தகவல்கள் வெளியாகின. அவ்வாறு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
அக்.11 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!
தற்போது திருவாரூர் அருகே கொட்டாரக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 3 மாணவர்களுக்கும், மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த 2 பள்ளிகளுக்கும் நேற்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் திங்களன்று பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.